Monday, April 24, 2017

மே மாதக் கூட்டம் (2017)


எண்பதாம் ஆண்டுத் தொடக்க மாதக் கூட்டம்

கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் முத்துவிழாப் புத்தாண்டில்
முதற் சிறப்புக் கூட்டம் 6-5-2017 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு
கம்பன் அடிப்பொடி சா. கணேசன் முன்னாளில் கம்பன் புகழ்பாடிக் களித்த காரைக்குடி சிவன் கோயில் தெற்குவீதியில் அமைந்துள்ள
மீனாட்சி பெண்கள் மேல்நி்லைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
அவ்வயம் ஆழ்வார் ஆய்வுமையத்தினை நிறுவி ஆழ்வார்கள் அருள் அமுதத்தையும் கம்ப நாட்டாழ்வார் கவின் கவிக் கனிச்சாறையும் பல்லோரும் பல்லாண்டுகளாகப் பருகப் பெருங்கொடையளித்து வைணவப் பாற்கடலை வாய் மணக்க உண்டு செவி மணக்கச் சிந்தி மகிழும் செந்தமிழ்ப் பேரறிஞர்களுக்கு விருதுகளும் வழங்கிப் புரவலராக விளங்கவதோடு இப்போது எம்பெருமானார் எதிகட்கு இறைவனாம் எதிராசர் மதத்தில் புரட்சி செய்த மகான் இராமானுசர் ஆயிரமாம் திருநட்சத்திரத்திரப் பெருவிழாக்கண்டு நாமெல்லாம் மொண்டு உண்டு மகிழ நூற்றுப் பதினான்கு நூல்கள் எழுதி உடையவர் புகழ்பாடி உன்னதத் தமிழை உள்ளன்பால் வழுத்தி வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கச் செய்து போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகச் செய்தருளும் வள்ளல்
டாக்டர் எஸ். ஜகத்ரட்சகன் அவர்களின்
நற்றமிழ்த் தொண்டிற்கு நன்றி பாராட்டி
ஆழ்வார் அனுஜர்
எனும் விருதுப் புகழாரம் சூட்டி மகிழ்கிறோம்.
டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள் தலைமையேற்று பாரட்டுரையும், ஆழ்வார் இராமானுஜர் அமுது உரையும் அருளிச்சிறப்பிக்கிறார்கள். அன்பர்கள் யாவரும் கலந்து கொண்டுக் கன்னித்தமிழ்ப் பருகிட வருக. வருக.
-----------------------------------------------------------------------------
நிகழ்ச்சி நிரல் (மாலை 5.30 மணி முதல்)
இறைவணக்கம்
செல்வி கிரேசி

வரவேற்பரை- 
திரு கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்

தலைமை உரையும் பாரட்டுரையும்
ஆழ்வார் இராமானசர் புகழ் அருளுரையாய்
டாக்டர் சுதா சேஷையன்
ஆழ்வார் அனுஜர் விருது வழங்கல்
திரு. அரு. வே. மாணிக்கவேலு
விருதுரை ஆக்கமும் வாசித்தலும்
கவிஞர் கிருங்கை சேதுபதி
கம்பன் கழக முத்துவிழாத் தொடக்க வாழ்த்துரை
1947 ஆம் ஆண்டு ஒன்பதாம் ஆண்டுக் கமபன் விழாவில் திரு.விக. தலைமையில் பங்கேற்று வாழ்க உலகம் என வாழ்த்திய மூதறிஞர் கவிஞர்
ரெ. முத்துக்கணேசனார்

ஏற்புரையும் அமுத உரையும்
ஆழ்வார் அனுஜர் டாக்டர் எஸ். ஜகத்ரட்சகன்
நன்றியுரை
பேரா. மு.பழனியப்பன்.
விருந்தோம்பல்
நிகழ்ச்சி உதவி
நமது செட்டிநாடு மாத இதழ்
அருவே. மாணிக்கவேலு சரசுவதி அறக்கட்டளை
தம் தாயார் காரைக்குடி மெ.செ. அ.பழ. செட்டிச்சி ஆச்சி என்ற உண்ணாமலை ஆச்சி நினைவாக அவர்தம் புதல்வர் திரு. ப. அ. பழனியப்பன் (சோலை) உண்ணாமலை தம்பதியர்





No comments :

Post a Comment